×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளிர் பிரீமியர் லீக் 5-வது சீசன்.. ஏலம் முதல் போட்டி தொடக்கம் வரை.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகளிர் பிரீமியர் லீக் 5-வது சீசன்.. ஏலம் முதல் போட்டி தொடக்கம் வரை.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Advertisement

மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்த தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் அக்டோபர் 28-ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. அணிகள் தங்களது வீராங்கனைகளை தக்கவைத்துக் கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 28 எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

நடப்பு சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி, பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

5-வது சீசனிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகளே தொடர்ந்து களமிறங்க உள்ளன. இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக WPL நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: ஆசியக் கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி.. பரிசளிப்பு விழாவில் பரபரப்பு.. தொடரும் சர்ச்சை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#BCCI #WPL 5 #Royal Challengers Bangalore #WPL #Women's premire league
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story