மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!
மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!
மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தொடரின் முதல் இரு லீக் ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்திலும், ஹாங்காங் அணியை 137 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்திய இந்திய அணி, ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 124 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார். பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CSK-வின் அடுத்த பயிற்சியாளர் ரெய்னா? இணையத்தில் வைரலாகும் பேட்டி?
மறுபுறம், பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. அந்த அணியின் பேட்டிங் இன்னும் வலுப்பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும், இந்தியாவின் வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சை சமாளிப்பது பாகிஸ்தான் அணிக்கு சவாலாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால், வழக்கம்போல ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை இரு அணிகளும் மோதிய டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த ஆதிக்கத்தைத் தொடரும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
இதுவரை நேருக்கு நேர்
இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளும் இதுவரை 17 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 14 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஸ்மிருதி மந்தனா வரலாற்று சாதனை.. ஒரே போட்டியில் 2 உலக சாதனைகள்!