உலகக்கோப்பை: அந்த வீரரை நம்ப முடியாது! சொதப்பிடுவாரு! அதனால் தான் இந்த முடிவு?
Why dinesh karthik chosen for world cup 2019
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 30 ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணைத்து அணிகளும் உலகக்கோப்பையில் விளையாட உள்ள அணியினை அறிவித்துவருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
அணியில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாவிட்டாலும் ஒருசில வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் தினேஷ் கார்த்திக். தோனிக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் முடிவில் முதலில் ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஆனால் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால் தற்போது இந்த வாய்ப்பு தினேஷ் கார்த்திக்குக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார். அப்படியிருக்கையில், முக்கியமான தொடரில் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்வது அவசியம். அந்த காரணத்திற்காகத்தான் தினேஷ் கார்த்திக்கை எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362