×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை அணிக்காக வாட்சன் செய்த தியாகம்! கேட்கும்போதே கண்ணீர் வடிகிறது!

watson in final match

Advertisement


ஐபிஎல் 12 வது சீசன் ஒருவழியாக முடிவடைந்தது. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

 முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. 150 ரன் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டுப்ளஸி மற்றும் வாட்சன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இந்த போட்டியின் போது சென்னை அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன், 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே ஷேன் வாட்சன் சரியாக விளையாடுவதில்லை என ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் சென்னை அணியின் கேப்டன் தல தோனி தொடர்ந்து அவருக்கு வாய்பளித்துக் கொண்டே இருந்தார்.பலரின் விமர்சனங்களுக்கு இறுதி போட்டி  மூலம் ஷேன் வாட்சன் பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலில் ரத்தகாயத்துடன் இருக்கும் ஷேன் வாட்சன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நேற்றைய போட்டியின் போது வாட்சன் ரன் எடுக்கும்பொழுது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார். போட்டிக்குப் பின்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#watson #IPL 2019 #final 2019
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story