நேற்று நடந்த ஒரே ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை படைத்த டேவிட் வார்னர்.!
14-வது ஐ.பி.எல். தொடரின் 23வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில
14-வது ஐ.பி.எல். தொடரின் 23வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி18.3 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் தனது 148 வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி ஐ.பி.எல்.லில் 50 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் அவர் கடந்துள்ளார். நேற்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்த சாதனையை புரிவதற்கு அவருக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362