விராட் கோலி பிறந்தநாளில் நடந்த மறக்க முடியாத சம்பவம்! நெகிழ்ச்சியுடன் கூறும் அனுஷ்கா சர்மா!
virat birthday celebrattion
விராட் கோலி தனது பிறந்தநாளை மனைவி அனுஷ்காவுடன் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். விராட் கோலி நேற்று அவரது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலியின் பிறந்தநாளை அவரும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பூட்டானில் அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர். அங்குள்ள மலைப்பகுதியில் அனுஷ்காவும் விராட் கோலியும் டிரெக்கிங் சென்றுள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.
இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், "இன்று 8.5 கிலோ மீட்டர் மலையேறியபோது அங்கிருந்த சிறிய கிராமத்தில் 4 மாத கன்றுக்குட்டி ஒன்றுக்கு உணவளிக்க சென்றோம். கன்றுக்குட்டி இருந்த வீட்டின் உரிமையாளர் எங்களை களைப்பாக இருக்கிறதா என்று கேட்டதுடன், டீ வேண்டுமா என்றார்.
நாங்கள் யார் என்று அவர்களுக்கு முற்றிலும் தெரியாது, ஆனால் அவர்கள் எங்களை அத்தகைய அரவணைப்பு மற்றும் அன்புடன் நடத்தினர். அது மறக்கமுடியாத தருணம் என பதிவிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362