×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொற்ப ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட்டாக வைத்த இந்திய அணி!! வெல்லுமா இந்திய அணி??

very low target to austrelia

Advertisement

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்குகிறார். மேலும் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு உமேஷ் யாதவும் விஜய் சங்கருக்கு பதிலாக மயங் மார்க்கண்டேயரும் களமிறங்குகின்றனர்.


இந்திய அணியின் துவக்க மட்டையாளர்களாக, ரோகித் சர்மாவும், கேஎல் ராகுலும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் ரிச்சர்ட்சன் ஆட்டத்ரிக்கு முதல் ஓவரினை சிறப்பாக வீசி 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஆட்டத்தின் ஆரம்பத்திலே இந்திய அணி தடுமாறியது.

மூன்றாவது ஓவரினை பெக்ரன்டப் வீசினர், அந்த பந்தினை ரோகித் சர்மா சம்பாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அவுட் ஆகி வெளியேறினார். அதற்கு அடுத்ததாக விராட் கோலி 24 ரன்களும், ரிசப் பண்ட் 3 ரன்களும், கேஎல் ராகுல் 50 ரன்களும், தினேஷ் கார்த்திக்- குருணல் பாண்டியா தலா 1 ரன்னும், உமேஷ் யாதவ் 2 ரன்களும் எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இறுதியில் தோணி 29 ரன்கள் எடுத்து  இறுதிவரை களத்தில்நின்றார். இந்தநிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிந்த நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 127 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. ஆனால் இந்த வெற்றி இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் எளிதாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#india vs austrelia #t20
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story