×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாரைவளர் வாராப்பூர் நாடு ஜல்லிக்கட்டு.! டோக்கன் அடிப்படையில் மட்டுமே காளைகள் அவிழ்ப்பு.!

வாரைவளர் வாராப்பூர் நாடு ஜல்லிக்கட்டு.! டோக்கன் அடிப்படையில் மட்டுமே காளைகள் அவிழ்ப்பு.!

Advertisement

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மிகப்பெரிய பகுதியான வாரைவளர் வாராப்பூர் நாட்டில் உள்ள 18 பட்டிகளுக்கும் பொது கோயிலான கருப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் வாராப்பூரில் நாளை 27.05.2022 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் வாராப்பூர் நாட்டின் 18 பட்டி மக்களும் தங்களது பெயர்களில் காளைகளை அவிழ்ப்பார்கள். இந்த ஜல்லிக்கட்டிற்கு  புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல்,தேனி சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்துகொள்ள உள்ளன.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்களுக்குமான டோக்கன்களும், காளைகளுக்குமான டோக்கன்களும் சமீபத்தில் வழங்கப்பட்டது. வாராப்பூர் ஜல்லிக்கட்டில் இந்தவருடம் காளையின் உரிமையாளர்கள் சிரமப்படாத வகையில் அட்டியை(தள்ளுவாடி) தவிர்த்து டோக்கன் முறைப்படி மட்டுமே காளைகள் அவிழ்க்கப்படும் என விழா கமிட்டியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் ஆவலுடன் வாராப்பூர் நாட்டு ஜல்லிக்கட்டு விழாவிற்காக காத்திருக்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடி படாத  காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், மின்விசிறி  எவர் சில்வர் கட்டில், பேன்,பிரிட்ஜ்,பாத்திரங்கள்,உட்பட பல்வேறு பரிசு பொரு ட்கள் வழங்க  காத்திருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jallikattu #varapur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story