இன்றைய இந்திய அணியில் இப்படி ஒரு சிறப்பு இருக்கா? என்ன விஷயம் தெரியுமா?
Three wicket keepers in India team India vs Bangladesh
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் மீதமுள்ள மூன்று இடத்திற்கு அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடிவருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனனர்.
ஏற்கனவே தல தோனி கீப்பராக செயல்படும் வரும் வேளையில் விஜய் சங்கருக்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் ஒரு விக்கெட் கீப்பர். இன்று களமிறங்கியுள்ள தினேஷ் கார்த்திக்கும் ஒரு விக்கெட் கீப்பர். எனவே, இன்றைய ஆட்டத்தில் மொத்தம் மூன்று விக்கெட் கீப்பர் இந்திய அணிக்காக விளையாடுவது இன்றைய ஆட்டத்தின் மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.