சுட்டி குழந்தை சாம் கரணை கண்டுகொள்ளாத சென்னை அணி.? தட்டித்தூக்க தயாராகும் 3 ஐபிஎல் அணிகள்.!
சுட்டி குழந்தை சாம் கரணை கண்டுகொள்ளாத சென்னை அணி.? தட்டித்தூக்க தயாராகும் 3 ஐபிஎல் அணிகள்.!
ஐபிஎலில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள சாம் கரன் மொத்தம் 32 போட்டிகளில் 322 ரன்களையும், 32 விக்கெட்களையும் வீழ்த்தி, சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். குறிப்பாக, சிஎஸ்கேவுக்காக விளையாடியபோது நடுவரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த இவரை சிஎஸ்கே தக்கவைக்கவில்லை, வரும் ஏலத்திலும் அவரை அந்த அணி எடுக்காமல் போகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 அணிகள் சாம் கரணை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா அணிக்கு சாம் கரன் அவர்களது முக்கிய டார்கெட்டாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல அகமதாபாத் அணி சாம் கரன், ஷர்தூல் தாகூர், ஹார்திக் பாண்டியா போன்றவர்களை ஏலம் எடுக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இருந்து வந்தார். அவர் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் கழற்றிவிடப்பட்டுள்ளார். அவரது இடத்தை நிரப்ப சாம் கரனை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362