இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்! சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் வாரியம்!
The former cricketer of the Indian team has passed away

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் (வயது 57) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி கேப்டனாக இருந்துள்ளார்.
1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். வி.பி. சந்திரசேகர் கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வி.பி. சந்திரசேகர் பதவிவகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.