இலங்கை-தென் ஆப்பிரிக்கா பரபரப்பான ஆட்டம்! திடீரென மைதானத்திற்குள் குப்புறப்படுத்த வீரர்கள்! வைரல் வீடியோ!
srilanka vs south africa
உலகக் கோப்பை தொடரின் 35ஆவது போட்டி இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே எமிரேட்ஸ் ரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பெர்னாண்டோ, குசல் பெரேரா அதிகபட்சமாக 30 ஓட்டங்கள் எடுத்தனர். நேற்று நடந்த போட்டியின் போது திடீரென மைதானத்திற்குள் தேனீக்கள் புகுந்ததால், வீரர்கள், நடுவர்கள் குப்புறப்படுத்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ், டுவைன் பிரிட்டோரியஸ் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். தென் ஆப்ரிக்க அணி 37.2 ஓவரில்1 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362