முன்னனி பந்துவீச்சாளர்கள் கூட செய்யாததை செய்த நடராஜன்.. தமிழக வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!
சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகபட்சமாக 21 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் யார்க்கரில் புதிய சாதனையை படைத்துள்ளார் சன்ரைசர்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது துல்லியமான பந்துவீச்சாள் எதிரணியினரை மிரட்டி வருகிறார்.
இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசிய நடராஜன் வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் நடராஜனின் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிகமான யார்க்கர் பந்துகளை வீசியுள்ள பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார் நடராஜன். 5 போட்டிகளில் அவர் 21 யார்க்கர் வீசியுள்ளார்.
யார்க்கர் மன்னன் பும்ரா, ரபடா மற்றும் சமி இவர்களை விட நடராஜன் இந்த தொடரில் அதிகமான யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் யார்க்கராக வீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362