×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர்ந்து சிக்கலில் ரோஹித் சர்மா.. பிசிசிஐ நடவடிக்கை பாயுமா?

ரோஹித் ஷர்மாவிற்கு காயம் முழுவதுமாக குணமடையாமலே ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார் என சில மூத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வந்தார். 

ஆனால் ஐபிஎல் தொடரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை காரணமாக காட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. ரோஹித் ஷர்மாவின் காயத்தின் தன்மை குறித்து இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது.

அதேசமயம் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடியது சர்ச்சையாகி உள்ளது. அந்த போட்டியில் றன் ஓடுவதற்கு ரோஹித் சர்மா சிரமப்பட்ட நிலையில் அவருக்கு காயம் முழுவதும் சரியாவதற்கு முன்னரே அவசரப்பட்டு ஆடியுள்ளார் என முன்னாள் வீரர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய அணியை விட ஐபிஎல் தொடர் தான் அவருக்கு முக்கியமா? தொடர்ந்து இவ்வாறு காயத்துடன் விளையாடினாள் இந்திய அணியில் அவரின் பங்களிப்பு கேள்விக்குறியாகும். ரோஹித் ஷர்மாவின் இந்த அலட்சிய போக்கை கண்டித்து பிசிசிஐ அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rohit sharma #BCCI #rohit sharma not fit #IPL2020
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story