இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி.! ஆரம்பத்திலே அதிரடி காட்டும் வார்னர்.!
2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி மைதானத்தில் பகல்-இரவு மோதலாக இன்று நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து இந்திய அணி பந்து வீசி வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் களமிறங்கியுள்ளனர். 7 ஓவர்கள் நிறைவு பெற்ற நிலையில் வார்னர் 29 ரன்களுடனும், ஆரோன் பிஞ்ச் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362