×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆட்டம் நாளை தொடரும்; இன்றைய போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்களின் நிலை என்ன?

same ticket can be used for reserve day

Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆட்டம் இன்று நடைபெறாது என ஐசிசி அறிவித்துவிட்டது. ஏற்கனவே நிர்ணயித்தது போன்று நாளை ஆட்டம் தொடரும். அதாவது இன்று எந்த ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே ஓவரில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடரும். புதிதாக ஆட்டம் நடைபெறாது. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் தொடரும்.

மேலும் இன்றைய போட்டியை மைதானத்தில் நேரில் காண டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அதே டிக்கெட்டை பயன்படுத்தி நாளை தொடரும் போட்டியை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #Semifinal #India vs Newzland #reserve day #match reseume tommorrow #fans ticket #cricket fans
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story