×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சச்சின் சொன்னது அப்படியே நடந்தது.! ரோஹித், விராட் இல்லாவிட்டால் என்ன.? சொன்னதை செய்தார்கள் இந்திய அணி.!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அடிலெய்டு தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதனையடுத்து T 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. தற்போது  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

முதல் டெஸ்ட் முடிந்த பின்னர், விராட் கோலி இந்தியா திரும்புகிறார். அதேபோல் மூத்த வீரர் ரோகித் சர்மாவும் தற்போதைய அணியில் இல்லை. இதனால் மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் இருவரும் இல்லாமல் இந்தியா களம் களமிறங்கியது. ஆனாலும், இந்தியாவால் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு பேட்டிங் உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை போதுமான அளவிற்கு வலிமை படைத்தது. ரோகித் சர்மா இல்லாமல் நியூசிலாந்தை எதிர்கொண்டோம். சில நேரங்களில் வீர்கள் காயம் அடையலாம். இதனால் போட்டியில் இருந்து அல்லது ஒட்டுமொத்த தொடரில் இருந்து வெளியேறலாம். தனிப்பட்ட நபர் யாராக இருந்தாலும், அவர்கள் இல்லாமல் விளையாட தயார் செய்து கொள்ள வேண்டும் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அடிலெய்டு தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது. இந்தநிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rohit #virat #sachin
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story