×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த வீரர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்!

Rohith sharma is gifted for india team

Advertisement

உலகளவில் ICC பேஸ்ட்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதல் இடத்திலும், ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் ரோகித்சர்மா இந்திய அணியில் விளையாடுவது இந்திய அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ்.

இதுபற்றி அவர் கூறுகையில் ரோஹித் சர்மா பந்துகளை மிக அபாரமாக கணித்து விளையாடுகிறார். ஆட்டத்தின் தொடக்கத்திலையே அவர் பந்துகளை கணித்துவிடுவதால் அடுத்து வரும் பந்துகளை மிக அபாரமாக அடித்து விளையாடுகிறார் என ரோஹித் சர்மாவை புகழந்துள்ளார் ஜாகிர் அப்பாஸ்.

மேலும், மற்றவீரர்களை போல் இல்லாமல் பலவிதமான ஷாட்டுகளை அடித்து விளையாடுவதில் சிறந்தவராகவும் அவர் உள்ளார். என்னை கேட்டால் இந்த உலகின் மிக சிறந்த துடுப்பாட்டக்காரர் ரோகித்சர்மா தான் என கூறுவேன் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் புகழ்ந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rohit sharma #World cup 2019
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story