×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்காக பல மணி நேரம் காத்திருந்தார் என கூறிய லெஜண்ட் பட நடிகை.! சீப் விளம்பரத்துக்காக இப்படியா..? ரிஷப் பண்ட் கொடுத்த பதிலடி.!

எனக்காக பல மணி நேரம் காத்திருந்தார் என கூறிய லெஜண்ட் பட நடிகை.! சீப் விளம்பரத்துக்காக இப்படியா..? ரிஷப் பண்ட் கொடுத்த பதிலடி.!

Advertisement

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுத்தேலா. சமீபத்தில் தமிழில் லெஜெண்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அண்ணாச்சி சரவணனுடன் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா குறித்து இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலாவுக்கு ரிஷப் பண்ட் மிகப்பெரிய ரசிகர் என்றும் அவரை காதலிக்கிறார் என்றும் சமீப காலங்களில் சமூக வலை தளங்களிலும் செய்தித் தாள்களிலும் கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னை பார்ப்பதற்கு ரிஷப் பண்ட் பல மணி நேரங்கள் காத்திருந்ததாகவும் தம்மை பல முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒருமுறை டெல்லியில் ஒரு நிகழ்ச்சிகாக சென்றிருந்த போது 10 மணி நேரத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் 'RP' என்ற எழுத்துகளில் பெயர் தொடங்கும் பிரபலம் எனக்காக ஹொட்டலில் பல மணி நேரம் என்னை பார்ப்பதற்கு காத்திருந்தார், என்னுடன் பேசுவதற்காக போராடினார் என கூறினார்.

இது தொடர்பாக ரிஷப் பண்ட் போட்டுள்ள சமூகவலைதள பதிவில், பிரபலமடைவதற்காக சிலர் நேர்காணலில் இந்த அளவிற்கு கூட பொய் கூறுவார்களா என்பது வேடிக்கையாக உள்ளது. மற்றொருபுறம் பெயர் புகழுக்காக, ஒருவர் இப்படியும் அலைகிறார்களா என்று வருத்தமாகவும் உள்ளது. அவர்களுக்கு கடவுள் தான் நல்வழி காட்ட வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Urvashi Rautela #Rishap Pant
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story