தந்தைக்கு கொரோனா.! சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.!
சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.
தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து லக்ஷயா சென் விலகியுள்ளார்.
சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் விளையாடுவதாக இருந்த நடப்பு சாம்பியனான இந்திய வீரர் 19 வயதான லக்ஷயா சென் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவரது பயிற்சியாளர் மற்றும் அவரது தந்தை டி.கே. சென்னுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற வீரர்களின் பாதுகாப்புக்கும், போட்டித் தொடருக்கும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டாம் என்பதாலேயே போட்டியை விட்டு விலகியதாக லக்ஷயா சென் கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362