Breaking#: துபாயிலிருந்து திடீரென வீடு திரும்பிய ரெய்னா.. ஐபிஎல்லில் இருந்து நீக்கம்.. என்ன காரணம்?
Raina returned to india unavailable in ipl2020
ஐபிஎல் 2020 தொடருக்காக துபாய் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென தொடரில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.
யூஏஇயில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2020 தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் கடந்த வாரமே துபாய் சென்று 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றனர். சென்னை அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் சென்னை அணி மட்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் தான் பயிற்சியை துவங்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா தனது சொந்த பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு திரும்பிவிட்டதாக சென்னை அணியின் சிஈஓ விஸ்வநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் பங்குபெற மாட்டார் என்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முழு ஒத்துழைப்பு தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362