நான் பந்து வீச பயந்த வீரர் இவர் தான்! எப்படி போட்டாலும் அடிப்பார்.. ஓப்பனாக பேசிய பாகிஸ்தான் பவுலர்.!
நான் பந்து வீச பயந்த வீரர் இவர் தான்! எப்படி போட்டாலும் அடிப்பார்.. ஓப்பனாக பேசிய பாகிஸ்தான் பவுலர்.!
தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாஹாப் ரியாஸ் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னைப் பொறுத்தவரை தற்போது இருக்கும் பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, பாபர் அசாம் ஆகியோர் சிறந்த வீரர்கள், தான் இவர்களுக்கு எதிராக பந்து வீசுவது கடினம்.
ஆனாலும் தான் பந்து வீசிய காலத்தில், நான் பந்து வீச பயந்த வீரர் என்றால் அது தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தான், அவர் தான் பந்து வீச வரும் போதே நான் எப்படி பந்து வீசப் போகிறேன் என்பதை அறியும் திறன் கொண்டவர். நான் எப்போதெல்லாம் அவருக்கு எதிராக பந்துவீசி வருகிறேனோ அப்போதெல்லாம் அவர் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362