மீண்டும் களமிறங்க வருகிறார் தமிழக வீரர் நடராஜன்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக விளையாடி ஒட்ட
கடந்தாண்டு ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மெட்களிலும் விளையாடி அசத்தினார். அதன்பின்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார்.
இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகுவதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார்.
இந்தநிலையில் தற்போது பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தன்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் நடராஜன். சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்தப் பேட்டியில் ஐபிஎல்லில் விளையாட பயிற்சி எடுத்து வருவதாக கூறினார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அமீரகம் புறப்படுகிறது. அதில் நடராஜனும் செல்வதாக அந்த அணியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் காயத்தில் இருந்து மீண்ட நடராஜன் ஐபிஎல்லில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362