இது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.! சொந்த மண்ணில் வாய்ப்பு கிடைக்காததால் நடராஜன் உருக்கம்.!
சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார் தமிழக வீரர் நடராஜன்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த த.நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார்.நடராஜன் கடந்த ஐ.பி.எல் சீசினில் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து நடராஜன் ஐபிஎல்லுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார்.
இதனையடுத்து டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் எடுத்தார். இதனையடுத்து நடராஜனுக்கு இந்திய அளவில் ஏரளமான ரசிகர்கள் பெருகினர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாகத் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
பிரபல பத்தரிகைக்கு பேட்டியளித்த நடராஜன், இந்திய அணி உடனான தனது பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். சென்னை டெஸ்டுகளில் இந்திய அணியில் நான் இடம்பெறவில்லை. இந்திய அணியுடன் இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது.
நான் கடந்த ஆறு மாதங்களாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததால், இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது, அதனை நான் புரிந்துக்கொண்டேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம்தான் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362