ஆத்தாடி என்னா அடி...! தெறிக்கவிட்ட மும்பை அணியின் மூவேந்தர்ஸ்.! ஆட்டம் கண்ட பஞ்சாப் அணி.!
mumbai indians won the punjab team
ஐ.பி.எல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது. மும்பை அணியின் ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா மூவரும் பஞ்சாப் அணி வீசிய பந்துகளை பறக்கவிட்டனர்.
சிறப்பாக ஆடிய மும்பை அணியின் மூவேந்தர்களான ரோகித் சர்மா (70), போலார்டு (47), ஹர்திக் பாண்ட்யா (30) என சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் சார்பில் காட்ரெல், ஷமி, கவுதம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தது. மயங்க் அகர்வால் 25, ராகுல் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் மட்டும் சிறப்பாக விளையாடி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 11, நீஷம் 7, சர்ப்ராஸ் கான் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கவுதம் இறுதி வரை நின்று 22 ரன்கள் சேர்த்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362