×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மும்பை அணிக்கு கிடைத்த மிக முக்கியமான வீரர்! அவரால்தான் இது எல்லாமே! யார் தெரியுமா?

Mumbai indains player alsaari joshep helped to won last two matches

Advertisement

நேற்று மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்து. காலத்தில் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கெய்ல் மற்றும் ராகுல் மிக சிறப்பாக விளையாடினார்கள்.

கெய்ல் ஆரம்பத்திலேயே தனது அசுர ஆட்டத்தை தொடக்கி பின்னர் ஆட்டமிழந்தார், அதிரடி மற்றும் நிதானத்துடன் ஆடிய KL ராகுல் 100 ஓட்டம் எடுத்து சாதனை படைத்தார். கடையில் பஞ்சாப் அணி 197 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணிக்கு 108 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய மும்பை அணி வீரர்கள் பெரிதாக யாரும் கைகிடுக்கவில்லை என்றாலும் பொல்லார்ட் மட்டும் மும்பை அணியை தனி ஒரு ஆளாக நின்று வெற்றியின் அருகில் கொண்டு சென்றார். 31 பந்துகளில் 83 ஓட்டம் பெற்று கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார் பொல்லார்ட்.

கடைசி ஓவரில் 15 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 4 ஓட்டம் மீதமிருந்த நிலையில் ராஜ்பூட் வீசிய பந்தில் பொல்லார்ட் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மும்பை அணி தோற்றுவிட்டது என அனைவரும் நினைத்தனர். இறுதியில் ஒரு பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்தில் இரண்டும் ஓட்டம் அடித்து மும்பை அணியை வெற்றபெற வைத்தார் அல்சாரி ஜோசப்.

இதற்கு முன்னர் கைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் வெறும் 12 ரன் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி மும்பை அணியை மாபெரும் வெற்றிபெற வைத்தார் அல்சாரி ஜோசப். மும்பை அணி 136 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கைதராபாத் அணியை 96 ஓட்டங்களில் மடக்கி மும்பை அணியை வெற்றிபெற வைத்தார் அல்சாரி. தனது இரண்டு ஐபில் ஆட்டத்திலும் தனி ஒரு ஆளாக மும்பை அணியை வெற்றிபெற வைத்துள்ளார் ஜோசப்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #Mumbai indians #Alsaari joshep
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story