சென்னை அணிக்கு இலக்கு எளிதாக இருந்தாலும், கவனிக்கவேண்டிய அந்த முக்கியமான விஷயம்!
Kolkaththa scored 108 runs chennai super kings easy target

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடுவு பெற்றுள்ள நிலையில் 23 வது போட்டியானது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதிரடி ஆட்டக்காரர்களுடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் லின் மற்றும் ராணா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஸ்ஸலும் மற்ற அணிகளிடம் காட்டிய சூறாவளி ஆட்டத்தை சென்னை அணியிடம் காட்ட முடியவில்லை. எப்போதும் அதிரடியாக விளையாடும் ரஸ்ஸல் இன்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். ஆரம்பத்தில் இருந்து சொதப்பிய கொல்கத்தா அணி இறுதி ஓவரில் எடுத்த 15 ஓட்டங்கள் மூலம் அணியின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்தது.
109 என்ற எளிமையான இலக்குடன் சென்னை அணி தனது பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 108 என்பது எளிமையான இலக்கு என்பதால் சென்னை அணியின் வெற்றி கண்முன்னே தெரிகிறது. இருப்பினும் சென்னை மைதானம் பீல்டிங்குக்கு சாதகமான மைதானம் என்பதால் சென்னை அணி சற்று நிதானத்துடன்தான் விளையாட வேண்டும்.