மங்கவுட் எல்லாம் எங்ககிட்ட செல்லாது! நாலாபக்கமும் பந்துகளை பறக்கவிட்ட கொல்கத்தா! மீளுமா பஞ்சாப்?
kkr played well
ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது.
ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஆறாவது போட்டியான இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளும் அவர்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லைன் சொர்ப்பரண்களில் வெளியேறினார். நரேன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக கைகோர்த்த உத்தப்பா, ராணா ஜோடி சிறப்பாக ஆடி அணியின் எணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக ஆடிய நிதிஸ் ராணா 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி அவுட் ஆகி வெளியேறினார். ராபின் உத்தப்பா நிதானமாக ஆடி 65 ரன்களை எடுத்தார். ரஸல் 17 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி வெளியேறினார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்து. பஞ்சாப் அணிக்கு 219 என்ற இலக்கை வைத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362