கோலியை இவ்வளவு மோசமாக பேசி வம்புக்கு இழுத்துள்ள ரபடா! பதிலடி கொடுப்பாரா கோலி?
Kholi is immature says rabada
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர் தான், ஆனால் எதிரணியினரை எதிர்கொள்வதில் கொஞ்சம் கூட பக்குவம் இல்லாதவர் என ரபடா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பையில் தொடரில் வரும் ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பே தென் ஆப்பிரிக்கா அணி 2 ஆட்டங்களில் ஆடிவிடும்.
இந்நிலையில் இரு அணிகளும் மோதிக்கொள்வதற்கு முன்பே கருத்து போர் ஆரம்பித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளரான ரபடா இந்திய அணியின் கேப்டன் கோலியை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "கோலி ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் மைதானதத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம் அவருக்கு பக்குவம் இல்லாததையே காட்டுகிறது. எதிரணி வீரர்களை அவர் பலமுறை செய்கைகளால் காயப்படுத்துகிறார். ஆனால் அதே சமயம் அவரை யாராவது காயப்படுத்தினால் அவரால் தாங்கிகொள்ள முடியவில்லை.
நாம் பிறரை காயப்படுத்தும் போது, நாமும் அதனை ஏற்றுக்கொள்ள பக்குவப்பட வேண்டும். ஆனால் கோலியிடம் அது சுத்தமாக இல்லை. ஐபிஎல் தொடரில் எனது பந்தில் பவுண்டரி அடித்ததும் ஏதோ முனுமுனுத்தார். ஆனால் அப்போது நான் அமைதியாக தான் இருந்தேன். அதே சமயம் நான் அவரிடம் கடிந்துகொண்டால் மட்டும் ஏன் அவர் கோபப்படுகிறார் எனத் தெரியவில்லை" என்று ரபடா தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ வரும் ஜூன் 5 ஆம் தேதி இருவரும் மோதுவது உறுதி. அதில் யாருக்கு பக்குவம் அதிகமாக உள்ளது என்பது நிச்சயம் தெரிந்துவிடும். ரபடாவின் வேகத்தை கோலி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.