மாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆன்ஜியோ பிளாஸ்டி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கபில் தேவ்.! வெளியான புகைப்படம்!.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் கபில் தேவ். 61 வயதாகும் இவருக்கு நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனனர். கபில் தேவ் தற்போது நலமுடன் இருப்பதாகவும், சில நாள்களில் கபில் தேவ் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362