×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடைசி மூச்சு வரை கபடி.. கபடி... என பாடியவாறே மைதானத்தில் மரணித்த கபடி வீரர்.! சோக சம்பவம்

கடைசி மூச்சு வரை கபடி.. கபடி... என பாடியவாறே மைதானத்தில் மரணித்த கபடி வீரர்.! சோக சம்பவம்

Advertisement

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும்போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். 21 வயது நிரம்பிய இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வந்தார். கபடி அணி வீரரான இவர், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.

இந்தநிலையில், நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் எதிரணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால்,  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவேஉயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, விமல்ராஜின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், கபடி விளையாட்டின் போது விமல்ராஜ் மயங்கி விழுந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kabadi player #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story