ஜடேஜாவிற்கு என்ன தான் ஆச்சு..? பயிற்சியில் கலந்துகொள்ள மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!
Jadeja not in part of 6 day camp at chennai
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய திருப்புமுனையாக இருப்பவர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சென்னையில் நடக்கும் 6 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாட்டார் என சிஎஸ்கே சிஈஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னையில் இருந்து யூஏஇக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 6 நாள் பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து இந்திய வீரர்கள் மட்டும் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜடேஜா மட்டும் இந்த 6 நாள் பயிற்சியில் கலந்துகொள்ள மாட்டார் என சிஎஸ்கே சிஈஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னையில் இருந்து யூஏஇக்கு புறப்படும் சென்னை அணியினருடன் ஜடேஜாவும் சேர்ந்து பயணிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஜடேஜாவிற்கு என்ன தான் ஆச்சு என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362