×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிரிக்கெட் வீரர்களை விடாது துரத்தும் கொரோனா.! சச்சின், யூசுப் பதானை தொடர்ந்து இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று.!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் மீண்டும் கொரோ

Advertisement

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், சமீபத்தில் பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வுக்கான ஓய்வு பெற்ற வீரர்களின் தொடரில் கலந்துகொண்டார். சச்சினை தொடர்ந்து அவரது லெஜண்ட் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும்  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. 

இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள யூசுப் பதான் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் என அழைக்கப்படும் இர்பான் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ifran bathan #corona
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story