ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக 2வீரர்கள் தேர்வு! குஷியில் இந்திய ரசிகர்கள்!
Ipl best two captains
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கி நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளிலேயே சிறந்த வீரர்கள், கேப்டன்கள் யார் என்பது குறித்து வாக்கு எடுக்கப்பட்டது.
ஓட்டின் அடிப்படையில் ஐ.பி.எல்.லின் சிறந்த கேப்டன்களாக சிஎஸ்கே தோனியும், மும்பை அணியின் ரோகித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வீரர்களுக்குமே இந்தியாவில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்த இரண்டு வீரர்களையும் ஐபிஎல்லின் சிறந்த கேப்டன் என தேர்வு செய்ததால் இந்திய ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தல தோனி சென்னை அணியை எல்லா தடவையும் பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று மூன்று முறை கோப்பையையும் வென்றுத் தந்திருக்கிறார். அதேபோல் டான் ரோகித், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362