×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

24 மணி நேரம் வரிசையில் நின்று இந்த ஆண்டு IPL தொடரின் முதல் டிக்கெட்டை வாங்கிய இளைஞர்!

Ipl 2019 first ticket

Advertisement

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கியதால், நேற்று மதியம் முதலே கிரிக்கெட் ரசிகர்கள் சேப்பாக்கத்தை முற்றுகையிட தொடங்கிவிட்டனர். குறைந்தபட்ச டிக்கெட் விலையாக 1300 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 2500, 5000, 6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் முதல் நாள் வெள்ளிக்கிழமை மதியம் முதலே முதல் ஆளாக வரிசையில் நிற்க துவங்கியுள்ளனர். நேற்று இரவும் அங்கேயே தங்கிய அவர்கள் இன்று காலை 11:30 மணிக்கு விற்பனையான முதல் டிக்கட்டை வாங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #Chepakkam #Ipl first ticket #prabhu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story