×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீர‌ர்கள்.! இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள்.!


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தத

Advertisement


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது.  தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 2 க்கு 2 என சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தநிலையில் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஒரு நாள் தொடரின் இந்திய அணியில், தமிழக வீர‌ர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர். மார்ச் 23-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 26-ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 28-ம் தேதியும் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பங்கேற்கும் வீரர்கள்:
விராட் கோலி(கேப்டன்) ரோஹித் சர்மா, தவான், சுப்மான் கில், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், யுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cricket #indian team
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story