கொண்டாட்டத்தின் நடுவில் கீழே விழுந்த தேசிய கொடி! பதறிப்போய் திலக் வர்மா செய்த செயல்! இதுதான் தேசப்பற்று.... வைரலாகும் வீடியோ....!!!
அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. திலக் வர்மாவின் தேசியக்கொடி சம்பவம் ரசிகர்களை நெகிழச் செய்தது.
அஹமதாபாத் நகரில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத வெற்றிக் கொண்டாட்டத்தை வழங்கியுள்ளது. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியதோடு, போட்டிக்குப் பிறகு மைதானத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் ரசிகர்களின் மனதை மேலும் கவர்ந்துள்ளது.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
அஹமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், மொத்தத்தில் மூன்றாவது முறையாகவும் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற முதல் அணியாக இந்தியா வரலாற்றுப் பெருமையும் பெற்றுள்ளது.
வெற்றிக்குப் பிறகு நடந்த சம்பவம்
போட்டி முடிந்த பிறகு வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தனர். அப்போது இளம் வீரர் திலக் வர்மா தேசியக்கொடியை ஏந்தி மைதானத்தில் ஓடி வந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த தேசியக்கொடி கீழே விழுந்தது. இதைக் கவனித்த திலக் வர்மா உடனடியாகக் கொடியை எடுத்துக் கொண்டு அதை தனது கண்களில் ஒற்றிக் கொண்டு மரியாதையுடன் மன்னிப்புக் கேட்டார்.
ரசிகர்கள் பாராட்டு
தேசக் கொடியின் மீது அவர் காட்டிய மரியாதையைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திலக் வர்மாவை பாராட்டி வருகின்றனர். "வெற்றிக் களிப்பிலும் தேசிய மரியாதையை மறக்காத வீரர்" என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
உலகக்கோப்பை வெற்றியால் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையில், திலக் வர்மா காட்டிய இந்த எளிய மரியாதை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்ற சம்பவமாக மாறியுள்ளது.