×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

50 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி.! விராட் கோலியை கொண்டாடும் ரசிகர்கள்.!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றத

Advertisement

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் எடுத்தது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக  368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 2-வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று துவங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்து வெச்சாள் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 

ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 1971-ஆம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணிதான் கடைசியாக ஓவல் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#virat #indian team
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story