×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 விக்கெட்டுகளை இழந்து கடுமையான நிலையில் இந்தியா.! ரசிகர்களின் தற்போதைய வேண்டுதல் இதுதான்!!

india fans eagerly waiting for rain

Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டறில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் முதல் ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினார்.இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.நான்காவது ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார் கேஎல் ராகுல்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பத்தாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். 18ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 60ரன்கள் எடுத்துள்ளது.
இவ்வாறு போட்டி மிகவும் கடுமையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்தியா இறுதி போட்டிக்கு செல்ல தற்போது மழை வந்தால் பரவாயில்லை நேரடியாக இறுதிப்போட்டிக்கு இந்தியா சென்றுவிடும் என ரசிகர்கள் வேண்ட துவங்கியுள்ளனர். 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #newzland #cricket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story