×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குறைவான இலக்கை எட்ட தடுமாறும் இந்திய அணி!! வெற்றி யாருக்கு?

குறைவான இலக்கை எட்ட தடுமாறும் இந்திய அணி!! வெற்றி யாருக்கு?

Advertisement

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட்: கடும் பதட்டத்தில் ஆட்டம் – வெற்றிக்கு இந்தியாவுக்கு இன்னும் 135 ரன்கள் தேவை!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 3வது போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதும், 2வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுமான நிலையில், இரு அணிகளும் 1-1 என சமமாக உள்ளன.

3வது டெஸ்ட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர் 387 ரன்கள் எடுத்தனர். அதே எண்ணிக்கையை இந்தியா தனது முதல் இன்னிங்சிலும் குவித்து சம அளவில் இருந்தது.

இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியாவுக்கு வெற்றிக்கான இலக்கு 193 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீரர்களாக வந்த ஜெய்ஸ்வால், ரன் எதுவும் இல்லாமல் அவுட் ஆனார். கருண் நாயர் 14, கேப்டன் கில் 6, மற்றும் ஆகாஷ் தீப் 0 ரன்களில் வெளியேறினர்.

ஆட்டத்தின் 4வது நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழந்து 58 ரன்களில் தடுமாறி உள்ளது. பொறுப்புடன் விளையாடி வரும் கே.எல்.ராகுல் 33 ரன்களில் களத்தில் உள்ளார்.

இந்தியா வெற்றிபெற இன்னும் 135 ரன்கள் தேவைப்படுகிறது, அதேசமயம் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியுள்ளது. ஆட்டத்தில் ஒரே நாள் மட்டும் மீதமுள்ள நிலையில், இந்த போட்டி பரபரப்பாக மாறியுள்ளது. 5வது நாள் ஆட்டம் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India England Test #இந்தியா டெஸ்ட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story