×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்கும் இந்திய வீராங்கனை.!

நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்கும் இந்திய வீராங்கனை.!

Advertisement

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்க உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதன்படி, இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறங்குகிறது.

மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி நிரைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார்.

உலக தரவரிசையில் ஹரிகா 11-வது இடத்தில் உள்ள ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. இவர் 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னையில் நடக்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் ஹரிகா நிறைமாத கர்ப்பிணியாக கலந்துகொள்ளவுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Harika Duronavalli #chess #pregnant
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story