ஐபிஎல் துவங்கும் தேதியை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் கிரிக்கெட் தாதா கங்குலி!
ganguly talk about IPL
ஐபிஎல்-ன் நிர்வக கவுன்சில் கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதனையடுத்து 13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "13 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24- ஆம் தேதி நடைபெறும் என்றும், ஐபிஎல் இரவு விளையாட்டுகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
போட்டிகள் இரவு 7.30க்கு துவங்கலாம் என பேச்சு வார்த்தை இருந்தாலும் கூட, முந்தைய ஆண்டுகளைப் போல இது இரவு 8 மணி முதல் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரேநாளில் இரண்டு போட்டிகளில் நடைபெறும் எண்ணிக்கையும் ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362