×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா நேரத்தில் தினக்கூலியாக பணியாற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்!

Former Captain Of Wheelchair Cricket Team Works As A Labourer

Advertisement

இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மாற்றுத் திறனாளியான ராஜேந்திர சிங் தாமி தன் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாகப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவினால் தனது குடும்பத்தை காப்பாற்ற கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் அவர்.

கொரோனாவுக்கு முன்பு வரை ருத்ராபூரில் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமுள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி கிரிக்கெட் விளையாட பயிற்சி கொடுத்து வந்துள்ளார் ராஜேந்திர சிங் தாமி. ஆனால் அது தற்போது கொரோனா காரணமாக அதுவும் செய்யமுடியாமல் போனது.

இது தொடர்பாக ராஜேந்திர சிங் தாமி கூறுகையில், ஒரு கிரிக்கெட் தொடர் இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் வேறு வழியில்லாமல் என் தகுதிக்கேற்ப ஏதாவது வேலை கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து உத்தராகண்ட் மாநில பிதோராகர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாமிக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wheelchair Cricket Team #Former Captain #Rajendra Singh Dhami
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story