கொரோனா நேரத்தில் தினக்கூலியாக பணியாற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்!
Former Captain Of Wheelchair Cricket Team Works As A Labourer
இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மாற்றுத் திறனாளியான ராஜேந்திர சிங் தாமி தன் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாகப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவினால் தனது குடும்பத்தை காப்பாற்ற கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் அவர்.
கொரோனாவுக்கு முன்பு வரை ருத்ராபூரில் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமுள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி கிரிக்கெட் விளையாட பயிற்சி கொடுத்து வந்துள்ளார் ராஜேந்திர சிங் தாமி. ஆனால் அது தற்போது கொரோனா காரணமாக அதுவும் செய்யமுடியாமல் போனது.
இது தொடர்பாக ராஜேந்திர சிங் தாமி கூறுகையில், ஒரு கிரிக்கெட் தொடர் இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனால் வேறு வழியில்லாமல் என் தகுதிக்கேற்ப ஏதாவது வேலை கொடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து உத்தராகண்ட் மாநில பிதோராகர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட், மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தாமிக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362