அமெரிக்காவில் கருப்பினத்தவரின் மரணம்! கிரிக்கெட் வீரர் ஆதங்கத்துடன் வெளியிட்டுள்ள பதிவு!
Dilshan Munaweera talk about american death
அமெரிக்காவில் ஜார்ஜ் பிலோய்ட் என்ற 46 வயது மதிக்கத்தக்க ஆப்பிரிக்காவை சேர்ந்த அமெரிக்க கருப்பின நபர் கடந்த 25-ஆம் தேதி போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்படும் போது, போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் முழங்காலால், அவரை கீழே வைத்து அழுத்தியதால் பரிதாபமாக இறந்தார்.
இதனால் பல இடங்களில் உடனடி நீதி வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவரின் மரணம் அங்கிருக்கும் மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் தில்ஷன் முனவீரா, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்ஷன் முனவீரா அவரது டுவிட்டர் பக்கத்தில், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும், நிறம் முக்கிய கிடையாது. நாம் மனிதர்கள், அவர்களை மதிக்க வேண்டும். ஆழந்த இரங்கல் ஜார்ஜ் பிலோய்ட் என்ற ஆதங்கமான கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362