சிறந்த வீரர் ஒருவரையே அணியில் சேர்க்க மறுத்துவிட்ட தோனி..! பலநாள் ரகசியத்தை உடைத்த சி.எஸ்.கே ஓனர்..!
Dhoni refused to take outstanding batman into csk team
சிறந்த வீரர் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்க தோனி மறுப்பு தெரிவித்துவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிருக்கவேண்டிய ஐபில் போட்டிகள் கொரோனா காரணமாக பலமாதங்கள் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்தமாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான அக்கறை, வீரர்களை தேர்வு செய்யும் தோனியின் முறைக்குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் பேசிய அவர், "நாங்கள் சென்னை அணிக்காக சிறந்த அவுட்ஸ்டாண்டிங் வீரர் ஒருவரை ஏலம் எடுப்பதாக இருந்தோம், அதுகுறித்து அணியின் கேப்டன் தோனியிடமும் கூறினோம். ஆனால் அந்த வீரர் அணிக்குள் வந்தால் அணியின் ஒற்றுமையை கெடுத்து விடுவார் எனவும், எனவே அந்த வீரர் சென்னை அணிக்கு வேண்டாம் எனவும் தோனி தெரிவித்துவிட்டதாக என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த வீரர் யார், அவர் எந்த நாட்டு வீரர் என்ற எந்த தகவல்களையும் என். சீனிவாசன் கூறவில்லை.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362