×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு யார் கேப்டன் பார்த்தீங்களா.!! முன்னாள் வீரர்கள் கணிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு யார் கேப்டன் பார்த்தீங்களா.!! முன்னாள் வீரர்கள் கணிப்பு

Advertisement

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எதிர்பார்த்தது போலவே 2022 ஐபிஎல் சீசனுக்காக தோனி, ஜடேஜா, கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது.

வயது மூப்பு காரணமாக தோனி அடுத்த ஐ.பி.எல். போட்டியுடன் ஓய்வு பெற்று விடுவார் என்று தெரிகிறது. மேலும், தக்கவைக்கப்படும் வீரர்களை வரிசைப்படுத்துவதில் தோனி தனது பெயரை 2-வது இடத்துக்கு கொண்டு சென்றார். இதனால் அவரது ஊதியம் கடந்த சீசனை விட ரூ.3 கோடி குறைந்து விட்டது. சென்னை அணியில் ஜடேஜா தான் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில்,தோனி தான், ஜடேஜாவுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பார். அணியில் ஜடேஜாவின் மதிப்பு அவருக்கு நன்கு தெரியும். தோனி ஓய்வு பெறும் போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் வழங்கும் தொகைக்கு ஜடேஜா தகுதியானவர்’ என்றார். அதேபோல், சென்னை அணியின் அடுத்த கேப்டன் என்ற அடிப்படையில் தான் ஜடேஜாவுக்கு இவ்வளவு தொகை வழங்கப்படும் என்று நினைக்கிறேன் என இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#csk #Captain #jadeja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story