×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐ.பி.எல் போட்டியில் நான் இரட்டை சதம் அடிக்காததற்கு அந்த வீரர் தான் காரணம்! கிரிஸ் கெய்ல் அதிரடி பேச்சு!

chris gayle talk about missed double century

Advertisement

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகில் எந்த விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால் அணைத்து விளையாட்டு வீரர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் விளையாட்டு வீரர்கள் சமூகவலைத்தளங்களில் உரையாடி வருவது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட நிகழ்வு குறித்து கிரிஸ் கெய்ல் தற்போது ஓப்பனாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், அந்த போட்டி தொடங்கிய இரண்டு ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. மழை வந்ததால் களத்தில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். பிறகு ரவி ராம்பாலிடம் நான் 170-180 ஓட்டங்கள் அடித்தால் போதும் என்று சொன்னேன். ஆனால் அதன் பின்னர் நான் பேட்டிங் செய்யும்போது நல்ல பார்ம்க்கு வந்தேன்.

சில நேரங்களில் நாம் களத்தில் நிலைத்து நின்று விட்டால் இனி மேல் நம்மை அவுட்டாகும் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றும். அதே போன்று அன்றைக்கு எனக்கான நாளாக அமைந்தது. கடைசியில் 175 ஓட்டங்களுடன் நான் இன்னிங்சை முடித்தேன்.

டிவில்லியர்ஸ், டெத் ஓவர்களில் வந்து காட்டடி அடித்தார். அன்று அவர் மட்டும் கடைசியில் வந்து அதிரடியான பேட்டிங்கை ஆடவில்லையென்றால், நான் இரட்டை சதமடித்திருப்பேன் என்று கெய்ல் தெரிவித்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ipl #chris gayle #Double century
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story