×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாரை தாரையாய் கண்ணீர் விட்டு அழுத கிறிஸ் கெய்ல்.!! என்ன ஆச்சு.? மனதை உருக்கும் வீடியோ.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் தனது தாயை நினைத்து கண்கலங்கிய வீடியோ வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.

Advertisement

ஐபிஎல் அரங்கில் 350 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். 41 வயதான இவர் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி இருந்தார். கிறிஸ் கெய்ல், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கிறிஸ் கெய்ல் அனைத்து நாட்டு வீரர்களுடன் மிக நகைச்சுவையாக பழக கூடியவர். 2021 ஐபிஎல் தொடரில் விளையாடிய சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர். 

சில நாடுகளுக்கு விமான சேவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதால், பல வீரர்கள் மாலத்தீவு சென்றுள்ளனர். இந்தநிலையில் கிறிஸ் கெய்லும் மாலத்தீவில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி சர்வதே அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது மறைந்த தனது தாயை நினைத்து கிறிஸ் கெய்ல் கண்கலங்கினார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "கண்ணீர் நிற்கவில்லை அம்மா. எனக்கு தெரியும் என்னை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள். உங்கள் சிரிப்பை என்றுமே நான் மிஸ் செய்வேன் அம்மா" என உருகியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chris gayle #crying
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story