×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை அணி தோற்றதும் ஹர்பஜன் சிங்க் செய்த காரியம்! சோகமான ரசிகர்கள்!

Chennai super kings lost to mumbai indians by 1 run

Advertisement

ஐபில் சீசன் 12 நேற்றுடன் முடிவடைந்தது. இறுதி போட்டியில் மீண்டும் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 4 முறை ஐபில் கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது மும்பை அணி.

நேற்று முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 149 ரன் எடுத்தது. 150 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் பறிபோனதால் கடைசி நேரத்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி பெற்றது.

சென்னை அணியின் எதிர்பாராத இந்த தோல்வி சென்னை அணி ரசிகர்கள் உட்பட சென்னை அணி வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. கடைசி பந்தில் தாகூர் LBW முறையில் ஆட்டம் இழந்ததும் சென்னை அணி வீரர் ஹர்பஞ்சன் சிங்க் கையில் வைத்திருந்தால் போட்டால் ஓங்கி தனது காலில் தானே அடித்துக்கொண்டு அணிங்கிருந்து வெளியேறினார்.

ஒருவேளை தாகூர் ஆட்டம் இழக்காமல் ஒரு ரன் எடிதிருந்தால் கூட சூப்பர் ஓவர் வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த கடுப்பில்தான் ஹர்பஞ்சன் சிங்க் காலில் அடித்துக்கொண்டாரோ என்னவோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 Final #IPL 2019 #csk vs mi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story