தொடக்கமே மிக சொதப்பலாக அமைந்த சென்னை அணி! சோகத்தில் ரசிகர்கள்!
Chennai scored just 3 runs in 3 three overs
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் 50 வது போட்டி இன்று சென்னையின் சொந்த மைதானத்தில் நடந்துவருகிறது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், நடப்பு சாம்பியனான சென்னை அணியும் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பதை இன்றைய போட்டி தீர்மானிக்கும். இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளஸி இருவரும் ஆரம்பம் முதல் சொதப்பலாகவே ஆட்டத்தை தொடங்கினர். 9 பந்துகள் விளையாடிய வாட்சன் ரன் எதுவம் எடுக்காமல் ஆட்டம் இழந்தது சென்னை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
முதல் மூன்று ஓவருக்கு வெறும் மூன்று ரன் மட்டுமே எடுத்த நிலையில் நான்காவது ஓவரில் வாட்சன் ஆட்டம் இழக்க ரைனா களமிறங்கி சற்று அதிரடியாக விளையாடி வருகிறார். 7 ஓவர்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன் எடுத்துள்ளது. ரைனா 11 பந்துகளில் 22 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடிவருகிறார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362